இந்த உலகம் நிலையில்லை
பல்லவி
இந்த உலகம் நிலையில்லை
வாழும் வாழ்க்கையும் நிலையில்லை
புரியும் நாள் எப்போது?
பயனில்லை அப்போது!
புரியும் நாள் எப்போது?
பயனில்லை அப்போது!
சரணம் 1
வேதனை வாழ்வில் இருந்தாலோ
வல்லவன் அவனிடம் முறைகளிடு
சோதனை தந்திடும் ஷிர்க் வழியில்
சேர்ந்து நீ திரிவதை மறந்துவிடு!
அந்நியர் அவர்களின் மனதறிந்து
அன்புடன் பழகி இனிமை கொடு...
இஸ்லாத்தை அவர்கள் உணர்ந்துவிட
அவர்களுக்கோர் வாய்ப்பு கொடு
(இந்த உலகம்)
சரணம் 2
நன்மை செய்வதிலே பல தயக்கம்
ஆடம்பரங்கள் மீதுதான் மயக்கம்
எல்லாம் அழிந்துபோகும் ஒருநாளில்
அன்று பயனில்லை உன் வாழ்க்கை!
நபியின் வார்த்தைகள் முத்துக்கள்
நாம் தேட வேண்டிய சொத்துக்கள்
மறுமைநாள் அருகில் வரும்போது
மாண்ட நிமிடங்கள் திரும்பாது!
(இந்த உலகம்)